Tuesday, March 25, 2014

எகிப்து நாட்டில் தமிழர் பானை

எகிப்து, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோட்டுச் சில்லுகள் கிடைத்துள்ளன.

எகிப்து நாட்டுப் 'பெரெனிகே' துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள பானையோட்டுச் சில்லு இது.

இதில் கொ ற் ற பூ மா ன் என்னும் எழுத்துக்கள் உள்ளன.  இவற்றில் [ற], [ன] ஆகிய எழுத்துக்கள் தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு எழுத்துக்கள்.

கொற்ற பூமான்  பயன்படுத்திய பானை இது. இவன் எகிப்து நாட்டுக்குச் சென்று வாணிகம் செய்திருக்கிறான்.

நன்றி - செய்தியும் படமும் ஐராவதம் மகாதேவன்


No comments:

Post a Comment