Tuesday, March 25, 2014

பானை எழுத்து

பழங்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை-ஓடுகள் இந்தியாவிலேயே அதிகமான அளவில் தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளன. அவற்றைக் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலானவை எனக் கணித்துள்ளனர்.

அவற்றில் அக்காலத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அக்காலத் தமிழ் எழுத்தை இக்காலத்தில் தமிழ்ப்பிராமி எனக் குறிப்பிடுகிறோம்.

கொடுமணல் அகழ்வாய்வில் கிட்டிய பானைச்சில்லு இது.

இதில் கண்ணன் ஆதன் என்னும் எழுத்துக்கள் உள்ளன.

நன்றி - படமும் செய்தியும் ஐராவதம் மகாதேவன்


No comments:

Post a Comment